எதிர்கொள்ளவே முடியாத நிகழ்வுகள் அத்தனை நுட்பமாக நிகழ்ந்துவிடுகிறது. அள்ளி முடிக்கப்படாத சிகையின் ஈரம் போல, மெதுமெதுவாய் வடிந்து உடலின் சொல்லப்படாத ஏதோ ஒரு பாகத்தை நனைப்பதை போல […]
இன்னமும் கையாள தெரியவில்லை இளவெப்பமான கை பினைப்பை உலறலுக்கு பிறகான உரசல்களை சடாரென மோதிக்கொள்ளும் விழிகளை குறுஞ்சிரிப்போடு மழுப்பும் உதடுகளை தொட்டு விளையாட துடிக்கும் கண்ணக்குழியினை புரியாத
யார் கண்களுக்கும் புலப்படாத ஒரு கோட்டினை கடக்க, இருவருக்குமே மனமில்லை. இருவரின் தேகச்சூடும், இருவரின் படபடப்பும், இருவரும் சொல்லி திகைக்காமல் இல்லை. கேள்விகளே இல்லா ஒருவித பதில்களுக்கு,
நம் இருவரின் தூரத்தை துல்லியமாக சொல்லிவிட கருவிகள் ஏதேனும் இருக்கிறதா என தெரியவில்லை. ஒருவேலை இருந்தால் கடலுக்கும் நிலவுக்கும் இடையேயான தூரத்தை அது எப்படி கணக்கிடும் எனவும்
இருவரின் பிறப்பின் கதைகளும் இருவருக்குமே தேவையற்றவை. நானும் முதலில் பிறக்கவில்லை, நீயும் முதுகெலும்பில் இருந்து உருவாகவில்லை. எந்த பாம்பும் தடைசெய்த கனியை எந்த ஒருவரிடமும் புசிக்க தரவில்லை.
எத்தனையோ பகலிரவுக்குப் பின்னும் நினைவுகளில் இருந்து கரைந்துவிடவில்லை உன் சொல்லும், உன் மௌனமும். உன் அத்தனை பிராத்தனைக்கு பின்னும் நினைவுகளில் இருந்து அழிந்துவிடவில்லை நீயும், உன் பிம்பமும்.